districts

img

திருபுவனம் திகோ சில்க்ஸில் பழைய பட்டு புடவைகள் கண்காட்சி

கும்பகோணம், பிப்.26 - இந்தியாவின் பட்டு விற்பனையில் முதன்மை நிறுவனமான திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் மாசி திருவிழா பிப்ரவரி 10 முதல் மார்ச் 14 வரை  நடைபெற்று வருகிறது. திருபுவனம் பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு பெற்ற திகோ சில்க்ஸ் மாசி பட்டு திருவிழாவின் ஒரு அங்கமாக பாரம்பரியமிக்க திருபுவனம் பட்டு சேலைகளின் மாபெரும் கண்காட்சி சனிக்கிழமை  நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி பயன்படுத்தப்பட்ட சுமார் 750 திருபுவனம் பட்டு சேலைகள் 600 நபர்களிடம் இருந்து பெறப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இச்சேலைகளை கும்பகோணம் தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், கும்பகோணம் துணை இயக்குனர் சென்னை நெசவாளர் சேவை மையம் மற்றும் கும்பகோணம் கைத்தறி துறை உதவி இயக்குனர் அடங்கிய தேர்வு குழு மூலமாக தேர்வு செய்து, சிறந்த பட்டு சேலைகளுக்கு முதல் பரிசு ரூ.25000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 மதிப்புள்ள திருபுவனம் பட்டு சேலைகள் பின்னர் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளன. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.