districts

ரூ.4.5 லட்சம் பணத்தை மீட்டுத் தருக! வங்கி முன்பு மூதாட்டி போராட்டம்

தஞ்சாவூர், நவ.29-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த வர் மூதாட்டி சுசீலா (65). இவரது கணவர்,  மகன் ஆகியோர் கடந்த சில வருடங்க ளுக்கு முன்பு இறந்து விட்டனர். மூதாட்டி சுசீலா மட்டும் ஏனாதியில் தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில் அவர் தனக்குச் சொந்த மான நிலத்தை விற்று, அந்தப் பணத்தில் தனக்கு இருந்த கடன்களை அடைத்து விட்டு, மீதம் இருந்த தொகை ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை, பட்டுக்கோட்டையில் உள்ள அரசுடமை யாக்கப்பட்ட வங்கியில், கடந்த ஒரு வரு டத்திற்கு முன்னர் டெபாசிட் செய்துள்ளார். அதில் வரும் வட்டி பணத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்த நிலையில், அதே வங்கியில் பணி யாற்றும் ஊழியர் ஒருவர், அந்த பணத்தை தன்னிடம் தந்தால், மாதந்தோறும் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி மூதாட்டியை சம் மதிக்க வைத்து, வங்கியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வட்டி தந்த தாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்க ளாக அந்த ஊழியர் வட்டியும் தராமல், அச லும் தராமல் ஏமாற்றியதாக கூறப்படு கிறது. இதுகுறித்து அந்த மூதாட்டி வங்கி  மேலாளரிடம் பலமுறை புகார் தெரி வித்துள்ளார். ஆனால், வங்கி மேலாளர் தன்னால் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என தவிர்த்ததாக கூறப்  படுகிறது.  இதனால் மூதாட்டி சுசீலா, உறவினர்கள்  சிலருடன் வங்கி முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், மூதாட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வங்கி ஊழியரும் பணத்தை விரைவில்  திருப்பித் தருவதாக உறுதியளித்தார். பின் னர், மூதாட்டி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.