தஞ்சாவூர், ஏப்.1- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நடுப்படுகை, கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி, திருவிடைமருதூர் தாலுகா முள்ளங்குடி ஆகிய இடங்களில், கொள்ளிடம் ஆற்றில், மணல் மாட்டு வண்டி களுக்கென குவாரி திறக்க வலியுறுத்தி, மணல் மாட்டுவண்டி தொழிலாளர் (சிஐ டியு) சங்கம் சார்பில், தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு, கோவிந்தராஜ், நாகராஜ், விஜி, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது முல் லங்குடியில் உள்ள மணல் குவாரி ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும். நடுப்படுகை குவாரி 15 தினங்களுக்குள் திறக்கப்படும். கொத்தங்குடி மணல் குவாரி தொடர்பாக மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள் ளது எனத் தெரிவித்தார்.