தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே வாட்டாக்குடியில், தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு தினத் தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாட்டாக்குடி இரணியன் நகர், வாட்டாக்குடி இரண்டு இடங்களில் கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம் சார்பில், வாட்டாக்குடி இரணியன் நினைவு ஸ்தூபி க்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சிபிஎம் மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில் குமார், ஆர்.கலைச்செல்வி, சிபிஎம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம், நிர்வாகிகள் காசிநாதன், வேதாச்சலம், முருகவேல், திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வீ.மெய்யநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் எம்.பாரதிமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.