districts

img

திரிபுராவில் பாஜக அராஜகம்: தஞ்சாவூரில் சிபிஎம் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 7- திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழி யர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, வீடு, கட்சி அலுவலகங்களை தீ  வைத்து சூறையாடும் பாஜக- ஆர்.எஸ்.எஸ்  குண்டர்கள் அராஜகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சா வூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநகர் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலை வர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், ஒன்றியச் செயலா ளர் கே.அபிமன்னன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் பி.செந்தில்குமார், பி.எம். இளங்கோவன், எம்.மாலதி, என்.சரவணன், கே.அன்பு, ராஜன், கோஷ்கனி, அப்துல் நசீர்,   வனரோஜா, கருப்புசாமி, இந்திய மாணவர் சங்கம் மாநிலத்தலைவர் அரவிந்தசாமி,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.