தஞ்சாவூர், மே 16 - தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில், எப்போதும் போல் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமெனக் கோரி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்த கோரிக்கை மனுவில், “தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யத்தில், கடந்த மூன்று தலைமுறையாக நரிக்குறவர் சமூக மக்கள், 26 பேர் பாசிமணி, ஊசிமணி, சோப்பு டப்பா, குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரு கின்றனர். தற்போதைய பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதுப்பிக் கப்பட்டது. நரிக்குறவர் சமூக மக்கள், பேருந்து நிலையத்தில் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்த சூழலில், அவர்கள் பிழைப்பு நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீண்டும் பழையபடி நரிக்குறவர் சமூக மக்கள் பிழைப்பு நடத்திட உதவி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், எப்பொழுதும் போல பிழைப்பு நடத்த, அனுமதிக்குமாறு மாநகராட்சி நிர்வா கத்துக்கு அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார். அப்போது, முறைசாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவே லன், கிளைச் செயலாளர் மாதவன், நரிக்குற வர் வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) தலைவர் ரேவதி, செயலாளர் சுகன்யா மற்றும் பலர் உட னிருந்தனர்.