தஞ்சாவூர், ஆக.11- சொந்த வீடு இல்லாமல் புறம்போக்கில் வசிப்பவர் களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூத லூர் வடக்கு ஒன்றியம் சார் பில் தோகூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் எம்.அகிலா, விவசாயிகள் சங்க சங்க ஒன்றியக் குழு உறுப்பி னர் எம்.கணபதி சுந்தரம் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.பாஸ்கரன், விதொச ஒன்றியக் குழு உறுப்பினர் இ.பன்னீர்செல் வம் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன் றியச் செயலாளர் எம்.ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பல ஆண்டுகளாக கோயில் இடத்தில் குடியிருப்பவர் களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாமல் புறம்போக் கில் வசிப்பவர்களுக்கு இல வச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். வேங்கூர் - தோகூர் இடையே விடுபட்ட இரண்டு கிலோமீட்டர் தார்ச்சாலையை அமைத்து தர வேண்டும். உய்யக்கொண் டான் வாய்க்கால் வடக்கு கரை யை உயரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.