கும்பகோணம், நவ.3- கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் மாமன்னர் ராஜராஜசோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் ராஜராஜசோழனின் 1037-ஆவது சதய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் சோழர் வரலாற்று ஆண்டு நாட்காட்டியை வெளியிட்டு தலைமை ஏற்றார். மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம் முன்னிலை வகித்தார். பம்பப்படையூர் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மைய செய லாளர் எஸ்.கே.ஸ்ரீதரன் வரவேற்றார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சோழர் வரலாற்று மலர் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சு.க.முத்துச்செல்வம், சோழ மண்டல வரலாற்று தேடல் குழு தலைவர் உதயசங்கர் மைய தலைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆய்வா ளர்கள் கலந்து கொண்டனர் அப்போது, கும்பகோணம் அருகே உள்ள உடையா ளூரில் உள்ள ராஜராஜ சோழனின் நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டவும் ராஜராஜ சோழன் பெயரில் சாலைக்கு பெயர் சூட்டவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கூறுகையில், தமிழக முதல்வர் கவ னத்திற்கு இந்த கோரிக்கையை கொண்டு சென்று விரை வில் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. திருவையாறு அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் சூ.தங்கமுத்து நன்றி தெரி வித்தார்.