தஞ்சாவூர், டிச.15- தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் கட்டப்பட்டு வரும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் கட்டுமானப் பணியை வியா ழனன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 1.97 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு குறுவை பரு வத்தில் 2.22 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரபி பரு வத்தில் 8.54 லட்சம் டன்கள் கொள்முதலாகியுள்ளது. தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன்கள் மேல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் 50,000 டன்கள் கொள்ளளவுடனும், திட்டக்குடியில் 7,500 டன்கள் கொள்ளளவுடனும், செல்லம்பட்டியில் 6,000 டன்கள் கொள்ளளவுடனும் என மொத்தம் 62,500 டன்கள் கொள்ளளவு கட்டப்படுகிறது. இக்கிடங்கு கள் கட்டுமான பணி ஜனவரி மாதத்துக்குள் முடிவ டைந்து விடும். தமிழகத்துக்கு சர்க்கரை, அரிசி உள்ளிட்ட வற்றுக்கான மானியமாக ரூ.5,120 கோடி ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய மானிய தொகை ரூ.6,813 கோடி நிலுவையில் உள்ளது. நியாய விலை கடைகளில் கண் கருவிழி திரை மூலம் பொருள்கள் வழங்குவது அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் திருவல்லிக் கேணி, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக முழுவதும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’’ என்றார். ஆய்வின்போது, உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சு.பிரபாகர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.