சிவகங்கை, ஜூன் 21- சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் பகுதியில் விவசாயிகளுக்காக போரா டிய தியாகி ராமநாதன் நினைவஞ்சலி கூட்டம் நாச்சியாபுரத்தில் நடைபெற் றது. சிவகங்கை மாவட்டம் கண்டர மாணிக்கம் நாச்சியாபுரம் பகுதியில் விவ சாயிகள் நலனுக்காக போராடி சிறை சென்றார். அங்கு சிறையில் தியாகி பாலு வை தூக்கிலிட்ட போது அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சிறை காக்கிகளால் அடித்துக் கொல்லப்பட்ட வர் தியாகி ராமநாதன் . மூத்த தலைவர் பி.சீனிவாசராவ் தியாகி ராமநாதனோடு இணைந்து இப்பகுதியில் விவசாய சங்க அமைப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். நாச்சியார்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தியாகி ராம நாதன் வீரவணக்க கூட்டம் நடைபெற் றது இந்நிகழ்ச்சிக்கு தாலுகா செயலா ளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், கருப்புசாமி, காரைக்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் பேசினர்.