districts

img

சுகாதாரமற்ற ஷவர்மா உணவுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

சுகாதாரமற்ற ஷவர்மா உணவுகளை விற்பனை செய்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார் 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவிலேயே  சிறப்பாக   தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது கொரோனா கட்டுப்படுத்தும்  வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18வயதுக்கு மேற்பட்டவர்கள் 92.89 சதவிகிதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் இரண்டாவது தவணையாக 79. 39 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர் 

இன்னும் தோராயமாக இரண்டு கோடி மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடாமல் இருப்பதால் அவர்களுக்கு இன்றைய தினம் நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று   ஆய்வு செய்தேன் அப்போது அங்கு பிரேத பரிசோதனை கூடம் கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அங்கு 1.5 கோடி மதிப்பீட்டில் விரைவில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்படும். தமிழகம் முழுவதும் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று நேற்றைய தினம் முதலமைச்சர் அறிவித்துள்ளார் அதன்படி சேலம் மாவட்டத்தில் முப்பத்தி எட்டு நகர்புற சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது மாநகராட்சியில் 32 இடமும் நகராட்சி பகுதி 6 இடமும் அமைக்கப்படும் சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யப்படும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஷவர்மா உணவு என்பது மேல்நாட்டு உணவு எனவே இது நம் நாட்டிற்கு உகந்தவை அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும் நம் நாட்டு உணவுகளை மக்கள் விரும்ப வேண்டும் என தெரிவித்தார். ஷவர்மா விற்பனை செய்யப்படும் கடைகளில் தரமானதாக உள்ளதா அங்கு இறைச்சிகள் பதப்படுத்தும் வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆய்வின் அடிப்படையில் சுகாதாரமற்ற ஷவர்மா விற்பனை செய்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா சிறப்பு பணியில் வேலை இழந்தவர்களுக்கு  மீண்டும் வேலைவாய்ப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் 

தற்போது 708 நகர்புற சுகாதார மையம் ஏற்படுத்தப்பட உள்ளது அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உதவியாளர்கள் தேவைப்படுவதால் ஏற்கனவே பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதியதாக 2004 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். கேரளாவில் பரவும் புதிய தக்காளி வைரஸ் நோயால் யாரும் பீதி அடைய தேவையில்லை என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்