districts

img

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து இடதுசாரி, விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், மே 28- பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை உயர்வை கண்டித்தும், ஒன்றிய மோடி அர சின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண் டித்தும் இடதுசாரிகள் விசிக இணைந்து தமி ழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம்,  பெத்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையம் முன்பு  சிபிஎம் தாலுகா செயலாளர் கே.காளிதாஸ்,  சிபிஐ ஒன்றிய செயலாளர் ஜெ.ஸ்டாலின், விசிக சார்பில் ரஷ்யா ரவி ஆகியோர் தலை மையிலும், ஒமலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் சிபிஎம் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆத்தூர் பழைய பேருந்து நிலையம்  முன்பு சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.முரு கேசன், சிபிஐ தாலுகா செயலாளர் கே. பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராம மூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ. மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஜலகண்டபுரம் பேருந்து நிலையத் தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே. ராஜாத்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா, விடு தலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செய லாளர் செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர். சங்ககிரி பேருந்து  நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.கே.சேகர், ஏ.ராமமூர்த்தி, சிபிஐ நிர் வாகிகள் சிட்டு, பழனியப்பன் விசிக சக்தி வேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை
கோவை சரவணம்பட்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நிர்வாக் குழு உறுப்பினர் தங்கவேலு தலைமை தாங் கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் சண் முகசுந்தரம், ஆர்.கோபால், சிபிஐ ஒன்றிய  செயலாளர் விசுவநாதன் பலர் கலந்து கொண்டனர். கோவை சுந்தராபுரம் பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வி.சுரேஷ், சிபிஐ சுப்பிரமணி, விசிக முகம்மது அலி  ஆகியோர் தலைமை வகித்தனர். இதில்  சிபிஎம் தெற்கு நகர செயலாளர் நாகேந் திரன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் பஞ்ச லிங்கம் ஆகியோர் உரையாற்றினர். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத் திற்குட்பட்ட தொப்பம்பட்டி பிரிவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் அமைப்புக்குழு உறுப்பி னர் கே.எஸ்.கனகராஜ், சிபிஐ (எம்எல்) பால சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சிவசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் ராகவன் உள்ளிட்டோர் உரையாற்றி னர். கோவை பீளமேடு புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின்  பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டியன்  தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திர்ன், சிபிஐ கல்யாணசுந்தரம், விசிக விடுதலை அன்பு மற்றும் சிபிஐ(எம்எல்) நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். சூலூர் பழைய பேருந்து நிலையம் அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ  நிர்வாகி பேரின்பன் தலைமை தாங்கினார்.

சிபிஎம் சார்பில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், சிபிஐ  கல்யாண சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் சுசி.கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொண்டாமுத்தூர் சந்தைபேட்டை அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய  செயலாளர் வி.மணி தலைமை தாங்கினார். சிபிஐ ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, விசிக முகம்மது அலி, விவசாய சங்க  மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதே போன்று அன்னூர், மேட்டுப்பாளையம், கோட்டூர், பொள்ளாச்சி உள்ளிட்ட 12 மையங் களில் நடைபெற்ற ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத் தின் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். இதில் சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜேம்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச,பிரபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்ட அமைப்புக்குழு உறுப்பி னர் கே,எஸ்.கனகராஜ், உள்ளிட்டோர் பங் கேற்று கண்டன உரையாற்றினர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் தெற்கு  ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங் கினார். சிபிஐ செயலாளர் செல்வராஜ், சிபிஐ  (எம்.எல்) செயலாளர் வெங்கடேஷ் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் திர ளானோர் கலந்து கொண்டனர். இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் ராசிபுரம் வடக்கு ஒன்றிய செய லாளர் ஜீ.செல்வராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் நகர கிளை செயலாளர் சண்முகம், சிபிஜ நகர செயலாளர் மணிமாறன், விடுத லைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலா ளர் ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜீ.ராணி, சிபிஐ எலச்சிபாளையம் ஒன் றிய செயலாளர் க.அன்புமணி, சிபிஐ வெண் ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செங் கோட்டுவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கல்வி செயலாளர் கும ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு வையப்பமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ ஒன் றிய செயலாளர் க.அன்புமணி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர்கள்.என்.வெங்கடேஷ், எம்.செங்கோட்டுவேல், சிபிஎம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.தேவராஜ். மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.