புதுக்கோட்டை, ஜூன் 23 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நம்புரான்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதி முழுவதும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் தொடக்கமாக நம்புரான்பட்டியில் நூறு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் நடராஜன், உதவிப் பொறியாளர் கோட்டை ராவுத்தர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், விசிக ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.