புதுக்கோட்டை, நவ.29- அவுட்சோர்சிங் முறை யில் வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடாது என வலி யுறுத்தி புதுக்கோட்டை நக ராட்சி தூய்மைப் பணியா ளர்கள் திங்களன்று உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்திற்கு புதுக் கோட்டை மாவட்ட உள் ளாட்சித்துறை தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் சி. அன்புமணவாளன், சி.மாரிக் கண்ணு மற்றும் நிர்வாகி கள் பேசினர். போராட்டத்தில் ஏராளமான தூய்மைப்பணித் தொழிலாளர்கள் பங்கேற்ற னர். நகராட்சி, மாநகராட்சி களில் அவுட்சோர்சிங் முறை யில் ஆட்களை எடுக்கக் கூடாது. அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். ஒப் பந்த தூய்மைப் பணியா ளர்களுக்கு மாவட்ட ஆட்சி யர் அறிவித்த தினக் கூலி ரூ.449 வழங்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் வழங்க வேண்டும். மாத சம்பளத்தை ஊழி யர்களுக்கு 5-ஆம் தேதிக் குள் வழங்க வேண்டும். இறந்த தொழிலாளிகளுக் கான வாரிசு வேலையை வழங்க வேண்டும். மழைக் கோட், கையுறை, கூட்டுமாறு உள்ளிட்ட பாதுகாப்பு உப கரணங்களை வழங்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.