districts

img

தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.11-  இந்திய அரசியல மைப்புச் சட்டத்திற்கு எதி ராகச் செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், ஒன்றிய அரசு  உடனடியாக அவரை திரும்பப்பெற வலியுறுத்தி யும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார் பில் புதுக்கோட்டையில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் புதுக்கோட்டை மண்டல பொதுச்செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, பொரு ளாளர் எஸ்.பாலசுப்ரமணி யன் உள்ளிட்டோர் பேசினர்.