districts

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள்

புதுக்கோட்டை, நவ.28-  பெரும்பாலான வணிக நிறுவனங்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்ப தால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப் பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், செயலாளர் ஏ.குமாரவேல் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: நாடு முழுவதும் 2011-ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயம் இந்திய அரசால் சட்டப் பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால்,  2016-ஆம் ஆண்டு செல்லாது என சமூக ஊட கங்களில் பரவிய வதந்தியின் காரணமாக சில வர்த்தகர்கள் 10 ரூபாய் நாணயங்களை  முற்றிலுமாக வாங்க மறுத்துவிட்டனர். இதனால், 2017-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் தற்  போதும் பல இடங்களில் 10 ரூபாய் நாண யம் செல்லா நிலையாகவே உள்ளது. சில நாட்களுக்கு முன்புகூட தமிழக அரசு 10  ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட் டத்தில் நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் திங்க ளன்று பெட்ரோல் நிரப்பிவிட்டு 10 ரூபாய் நாணயத்தை கொடுத்துள்ளார். அப்போது பெட்ரோல் நிலையத்தில் 10 ரூபாய் நாண யத்தை வாங்க மறுத்துவிட்டனர். பின்னர் வாலிபர் சங்கத்தினர் முறையிட்ட பின்பு வாங்கியுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், போக்குவரத்துத் துறையினர், வங்கி நிர்வாகத்தினர் உள்  ளிட்டோரிடம் விழிப்புணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.