புதுக்கோட்டை, ஜன.28- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வனசரக அலுவலகங்களுக்குட்பட்ட 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் செ.பிரபா தெரிவித்துள்ளதாவது: இனபெருக்கத்திற்காக வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து புதுக் கோட்டை மாவட்டத்திற்கு பறவைகள் வருடம் தோறும் வருகைபுரிகின்றன. இதன் படி வடகிழக்கு பருவமழை முடிவடைந் துள்ள நிலையில், ஜனவரி 28, 29 ஆகிய தினங்களில் புதுக்கோட்டை வனசர கத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர் கண்மாய், அருவாக்குளம், கவிநாடு கண்மாய் உள்ளிட்ட 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொரு ஈர நிலத்திலும் மேற்கொள் ளப்படும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளில் ஒரு பறவைகள் நிபுணர், இரண்டு தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள், ஒரு என்.ஜி.ஓ மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடம்பெற உள்ளனர். இப்பணிகள் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் இருப்பி டம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப் பெறுக்கின்றனவா என்பது குறித்து கணக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.