அறந்தாங்கி ஆக.18- புதுக்கோட்டை மாவட்ட பலநோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் மணமேல்குடி ஒன்றியம் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து ‘‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு’’ பேரணி துவங்கியது. பேரணிக்கு இயக்குநர் அருள்.யாகப்பா ராஜரத்தி னம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா நடேசன் துவங்கி வைத்தார். மீனவர் கூட்டமைப்பு பொறுப்பாளர் சுசிலா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் எம்.ஜோதிராஜ், மணமேல்குடி வட்டாட்சியர் ராஜா ஆகி யோர் பேசினர். ரோஷாலின்மேரி நன்றி கூறினார். பேரணியில் மணமேல்குடி மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் க.லாவண்யா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.