அறந்தாங்கி, மார்ச் 14- பருவம் தவறிய கனமழையால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கான நிவா ரணம் இதுவரை விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஏற்றவில்லை. உடனடியாக ஏற்ற வேண்டும் அறந்தாங்கி வட்டார விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி வட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் சொர்னராஜ் தலைமை யில் அறந்தாங்கி, வட்டாட்சியர் பால கிருஷ்ணன், மனமேல்குடி வட்டாட்சியர் ராஜா, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் ஆகியோர் முன்னி லையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கல் லணை கால்வாய் பாசானதாரர் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் பேசுகை யில், “இந்த ஆண்டு பருவம் தவறிய கன மழையால் பாதிக்கபட்ட விவசாயிகளுக் கான நிவாரணம் இதுவரை விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஏற்றவில்லை. உடனடி யாக ஏற்ற வேண்டும், சென்றாண்டு கோடை காலம் முடிவடைந்த நிலையில் ஏரிகளில் வண்டல் மண்அள்ள அனுமதி வழங்கப் பட்டது. மழையின் காரணத்தால் வண் டல்மண் அள்ள முடியவில்லை. இந்தாண்டு ஏரிகளில் டிராக்டர் மூலம் மட்டும் வண் டல்மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். மனமேல்குடி தாலுகா சிங்கவனம் பிர்காவில் வேதியன்குடிகிராமத்தில் ஆயக்கட்டுபட்டா நிலங்கள் நாண்கு ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியா மல் உள்ளது. அந்தப் பகுதியில் பொதுப் பணித்துறை வடிகால் வசதி செய்து கொடுக்கவேண்டுமென்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் தென்றல் கருப்பையா பேசுகையில், “பெருமகளூர் வரத்து வாரி (சர்க்கை) மிகைபோக்கி உடைந்து சேதமடைந்துள் ளது. அதை உடனடியாக சரிசெய்ய வேண்டு மென்றார்.