districts

புதுவையில் இன்று 10ஆம் வகுப்பு தேர்வு: மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரி, ஏப். 5- புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ஏப்.6 அன்று தொடங்குவதையொட்டி மாணவர்களுக்கு பள்ளிக்  கல்வி இயக்ககம் சார்பில்  கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட் டுள்ளன. இதுகுறித்து இணை இயக்கு நர் வெ.கோ.சிவகாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 6ஆம் தேதி முதல்  20ஆம் தேதி வரை அறிவிக்கப் பட்ட தேர்வு கால அட்டவ ணைப்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தேர்வுத் துறை மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக புதுச்சேரி பகுதியில் 38 இடைநிலைத் தேர்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 13 இடைநிலைத் தேர்வு  மையங்களும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான மைய  முதன்மைக் கண்காணிப்பாளர் கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இந்த ஆண்டு புதுச்சேரி பகுதி யில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 82 அரசு மற்றும் 147 தனி யார் பள்ளியைச் சேர்ந்த 12,972  மாணவர்கள் எழுதுகின்றனர். காரைக்கால் பகுதியில் 25 அரசு மற்றும் 34 தனியார் பள்ளியைச் சேர்ந்த 1,979 மாணவர்கள் தேர்வு  எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் நாட்களில் மந்தணக் கட்டுகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 10 வழித்தடங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வழித் தடத்திற்கும் வழித்தட அலு வலர்களுடன் ஆயுதம் ஏந்திய  காவலர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் தேர்வின் போது தடையின்றி மின்சார சேவை வழங்க உரிய துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் எவரும் அலைபேசி உள்ளிட்ட எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட் டுள்ளது. அதை மீறி அலைபேசி கள் மற்றும் ஏதேனும் பிற  தொலை தொடர்பு சாதனங்க ளையோ எடுத்து வந்து விட்டு தேர்வு மைய முதன்மைக் கண் காணிப்பாளரையோ அல்லது  தேர்வறைக் கண்காணிப்பாளர் களையோ பாதுகாப்பாக பராமரித்து திருப்பியளிக்குமாறு கோருதல் கூடாது. அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனித்தேர்வர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பு கைச் சீட்டு எண் மற்றும் பிறந்த  தேதியை வைத்து தனியார் கணினி மையம் மூலம் தேர்வுக் கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக் கம் செய்து கொள்ளலாம்.  தேர்வு அறையில் மற்றும் தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் புரியும் குற்றத்திற்கு ஏற்ப தண்ட னைகள் அளிக்கப்படும். எனவே  தேர்வர்கள் ஒழுங்கீன செயல்க ளில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.