பெரம்பலூர், நவ.14- பெரம்பலூர் மாவட்டத் தில் 69-வது கூட்டுறவு வார விழா பெரம்பலூர் சங்கு பேட்டை தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, பெரம் பலூர் சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரன் ஆகியோர் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் கூட்டுறவு துறை யின் மூலம் செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேர ணியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் உரையாற் றினார். அப்போது அவர் கூறு கையில், “அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ.14 அன்று தொடங்கி நவ.20 வரை ஒரு வாரத்திற்கு தமி ழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் நடத்தப்பட உள்ளது. அதன் படி பெரம்பலூர் மாவட்டத் தில் திங்களன்று கூட்டுறவு துறையின் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் பல் வேறு திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 5-வது நாளான 18.11.2022 அன்று போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில், சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள், பய னாளிகளுக்கு நலத்திட்ட உத விகள் வழங்கப்பட உள் ளன” என்றார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் உள்ள மண் டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டு, மரக் கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து ஊழியர்கள் மத்தியில் கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை மண்டல இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை வாசித்தார். கூட்டுறவு வார விழாவின் தொடக்கமாக, திங்களன்று தஞ்சாவூர் சாமியப்பா மற் றும் பட்டுக்கோட்டை கூட்டு றவு தொழிற்பயிற்சி நிலை யத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், ஓவி யப்போட்டிகள் நடத்தப்பட்டன. செவ்வாயன்று (நவ.15) தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டு றவு மொத்த விற்பனை பண்ட கசாலை மற்றும் கும்பகோணம் சந்திரசேகரபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் விற் பனை மேளா நடைபெறவுள் ளது. நவ.16 ஆம் தேதி தஞ் சாவூர் சாமியப்பா கூட்டுறவு பயிற்சி நிலையம் மற்றும் கும்பகோணம் திகோ சில்க் சில் மருத்துவ முகாம் நடை பெறவுள்ளது. தொடர்ந்து நவ.17 அன்று மதுக்கூர் மற்றும் சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்க ளில் உறுப்பினர் கல்வி திட் டம் நிகழ்வும், தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் கூட்டுறவு தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. நவ.18 அன்று மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா கும்ப கோணம் மூர்த்தி கலைய ரங்கில் நடைபெறவுள்ளது. இதில் சிறந்த சங்கங்களுக்கு விருதுகள் வழங்கியும், பல் வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நவ.19 அன்று திருக்கா னூர்பட்டியில் கால்நடை மருத்துவ முகாமும், நவ.20 அன்று தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் விற்ப னையாளர் - வாடிக்கையா ளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.