districts

img

அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் கட்டண உயர்வு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி

பெரம்பலூர், மே 16 - பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி களான குன்னம் கிராமத்தில் இருந்து, திட்டக்குடி வரை செல்லும் நகரப் பேருந்து  மற்றும் அரியலூரில் இருந்து வேப்பூர்  வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து  நிகழ்ச்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திங்க ளன்று துவக்கி வைத்தார்.  தொடர்ந்து அதே பேருந்துகளில் பயணிகளுடன் பயணம் செய்த அவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து இதுவரை முடிவு செய்யப்பட வில்லை. அண்டை மாநிலங்களில்  பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  அந்த மாநிலங்களுக்கு செல்லும் நமது  தமிழக அரசு பேருந்துகளில் கட்டண விகிதம் ஏற்படுகிறது. இது அண்டை மாநில ஒப்பந்தத்தின்படி சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து அதிகாரிகள் புதிய கட்டண விகிதத்தை வரையறை செய்து  கொடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக  முதல்வரிடம் பேசி கட்டண உயர்வு அமல் படுத்தப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சுமார் ரூ.48,500 கோடி கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் பேருந்து கட்ட ணம் உயர்த்துவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழக முதல்வர், ‘இது ஒரு சேவைத் துறை  என்பதனால் பொதுமக்களுக்கு நிறை வான சேவையை வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

14-வது ஊதிய குழு பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டு களாக நடைபெறவில்லை. தற்போது முதல்வர் தலைமையில் அந்த கூட்டம் நடைபெற்றது. மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு, போனஸ் உள்ளிட்ட பிரச்சனைகளும் விரைவில் பேசி தீர்க்கப்படும். பேருந்து நிலையங்களில் பயணி களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும்  திருநங்கைகள் குறித்து புகார் வரப்  பெற்றால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படுத்த  முடியாத நிலையில் உள்ள பேருந்து களை மாற்றவும், பழுது நீக்கம் செய்ய வும், புதிய பேருந்துகள் வாங்குவ தற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தாக்கப்படுவது குறித்து முறையான விசாரணை நடத்த படும்.   போக்குவரத்துக் கழகத் தொழிலா ளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ  வெங்கடபிரியா, பெரம்பலூர் சட்டமன்ற  உறுப்பினர் பிரபாகரன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள்-பொதுமக்கள் பங் கேற்றனர்.