பெரம்பலூர், அக்.11 - இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பெரம்பலூர் - அரியலூர் 8-வது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் கேஜிஎம் மண்டபம் அ.கணேசன் நினை வரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வரவேற்புகுழு தலைவர் டாக்டர் சி.கருணாகரன் வரவேற் றார். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் பி.ரெங்கராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். துணைச் செயலாளர் கே. கண்ணன் அஞ்சலி தீர்மானமும் அரியலூர் மாவட்ட செயலாளர் பி.துரைசாமி வேலை அறிக்கையும் வாசித்தனர். மாவட்ட பொரு ளாளர் ஆர்.சிற்றம்பலம் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலச் செய லாளர் சி.ஜெயபால் நிறைவுரையாற்றினார். சிஐடியு பெரம்பலூர் மாவட்ட புதிய செய லாளராக எஸ்.அகஸ்டின், தலைவராக ஏ. ரெங்கநாதன், பொருளாளராக பி.ரங்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரிய லூர் மாவட்ட புதிய செயலாளராக பி.துரை சாமி, தலைவராக கே.கிருஷ்ணன், பொருளா ளராக கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மய மாக்குவதை கைவிட வேண்டும். பெரம்ப லூர் மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைத்திட வேண்டும், சுமைப்பணி தொழி லாளர்களுக்கு கேரள மாநிலத்தை போல் போனஸ், பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். கைத்தறி, கட்டு மானம், ஆட்டோ, டாக்சி, சுமைப்பணி, வீட்டுவேலை, தையல் சாலை போக்குவ ரத்து, சாலையோர வியாபாரம், முடிதிருத்து வோர், சலவை தொழிலாளர்கள், நேரடியாக வாரியத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கிட வேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளி லிருந்து நிலுவைத் தொகையுடன் கூடிய ஓய் வூதியம் வழங்க வேண்டும். கைத்தறி தொழிலை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் மீது அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அரசு ஊழியர் களாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் உள்ள ஆலைகளில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.28 ஆயிரம் வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிமெண்ட் ஆலை தொழிலாளர்களுக்கு சிமெண்ட் ஊதிய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. துணைச் செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.