districts

பழனி கோவில்  உண்டியல் வசூல் ரூ.7 கோடி

பழனி, பிப்.24- பழனி மலைக் கோவில் உண்டியல்கள் கடந்த மூன்று நாள்களாக திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கை ரூ. 7 கோடியை தாண்டியது. இந்தக் கோவில் உண்டியல்கள் தைப்பூசத்தையொட்டி இருப்து நாட்களில் நிரம்பியது. இதையடுத்து கடந்த திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கை ரூ.7 கோடியை தாண்டியது. மேலும், தங்கம் 1,200 கிராம், வெள்ளி சுமார் 40 ஆயிரம் கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 2,500-ம் இருந்தன. இது தவிர நவதானியம், முந்திரி, ஏலக்காய், கடிகாரம், பட்டாடை, புடவை உள்ளிட்டவைகளும் காணிக்கை யாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், கோவில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.