districts

img

ஏப்.5 தில்லி பேரணியை விளக்கி பிரச்சாரம்

நாகர்கோவில்,மார்ச் 31 பொதுத்துறை, நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித் தும், தொழிலாளர் சட்ட த் திருத்தங்களை கைவிடக் கோ ரியும், வேளாண் விளை  பொருட்களுக்கு நியாய விலை வழங்க கோரியும், ஏப்ரல் 5 தில்லியில் நடை பெறவுள்ள பேரணியை விளக்கி கருங்கல் பேருந்து நிலையத்தில் நோட்டீஸ் வினியோகம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் பொன். சோபனராஜ், சந்திரபோஸ், ராஜா, சகாயபாபு, ஜாண் ரோஸ் விவசாய சங்கம் சார்பில் பால்ராஜ் உள்ளிட் டோர் பங்கெடுத்தனர். தெருமுனைக் கூட்டம்  தில்லி பேரணியை விளக்கி கருங்கல் ஆட்டோ நிலையத்தில் வியாழக்கிழ மை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்ட நிர்வா கிகள் பொன்.சோபனராஜ், சந்திரபோஸ், சகாயபாபு, மாவட்ட செயலாளர் தங்க மோகன் பேசினர்.சிபிஎம் வட்டார செயலாளர் சாந்த குமார், தையல் சங்க வட்டார செயலாளர் சுசீலா, உட்பட திரளானோர் பங்கெ டுத்தனர்.