districts

img

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம்: நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், ஜன.19- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டாரவள மையம் சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந் தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாகப்பட்டி னம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது.  முகாமை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி தொடங்கி வைத்  தார். முகாமில் குழந்தை களுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பரா மரிப்பு உதவி தொகை, கல்வி  உதவி தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  மாற்றுத்திறனாளி குழந்  தைகளுக்காக ஈசிஜி, பல்  மருத்துவம், காது குறைபாடு களை எளிதில் கண்டறியும்  ஆடியோ மெட்ரிக் முறை, மனநல ஆலோசகர் மூலம்  ஆலோசனை வழங்கப்பட் டது பல்வேறு பிரத்யேக உப கரணங்கள் கொண்டு முகாம் நடைபெற்றது.