districts

img

ரூ.15 கோடியில் வேடசந்தூர் குடகனாறு அணை ஷட்டர்களை பழுது பார்க்க முடிவு

வேடசந்தூர், ஜூன் 24-  வேடசந்தூர் அருகே உள்ள அழகா புரி குடகனாறு அணையில் தேக்கி வைக்  கப்பட்டுள்ள தண்ணீரை வெளியேற்றி ரூ 15 கோடியில் ஷட்டர்களை பழுது பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு  அணை நீர் ஆதரங்களை ஏற்படுத்துவ தற்காக கடந்த 1973 ஆம் ஆண்டு அப்  போதைய முதலமைச்சர் கருணாநிதி யால் 5 ஷட்டர்கள் கொண்ட அணை கட்டப்பட்டது. 1977 ஆம் ஆண்டு வெள்  ளம் ஏற்பட்டு அணை உடைந்து நீர் முழு வதும் வெளியேறியது.  அதனைத் தொடர்ந்து அணையில் கூடுதலாக 10 ஷட்டர்கள் அமைக்கப் பட்டது. 1994 இல் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக் கப்பட்டது.  இந்த அணைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் சந்தனவர்த்தினி ஆறு, வரட்  டாறு, மான்கோம்பை ஆறு, மாங்கரை  ஆறு மற்றும் ஆத்தூர் காமராஜர் அணை ஆகியவற்றில் இருந்து மழைநீர் குடகனாறு வழியாக அணைக்கு வரு கிறது.  இந்த அணையின் நீர்மட்டம் 27 அடி ஆகும். அணையால் திண்டுக்கல் மாவட்டத்தில் 3663 ஏக்கர் விவசாய நில மும், கரூர் மாவட்டத்தில் 5337 ஏக்கர் விவ சாய நிலங்களும் பயன்பெறுகிறது. மேலும் அணையைச் சுற்றியுள்ள விவ சாய கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையில் மொத்தம் 27 அடிக்கும் 19 அடி தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய 5 ஷட்டர் கள் பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை பழுது பார்த்து அணையில் முழுமை யாக தண்ணீர் தேக்க வேடசந்தூர் எம்.எல்.ஏ., எஸ்.காந்திராஜன் முயற்சி யின்பேரில் தற்போதைய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ .15 கோடி ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து திண்டுக்கலில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதா ரத்துறை அலுவலகத்தில் செயற்பொறி யாளர் கோபி தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குடகனாறு பாதுகாப்பு  சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர்  பொம்முசாமி, ஊராட்சி மன்ற தலை வர்கள் குப்புச்சாமி, சுப்பிரமணி மற்றும்  திண்டுக்கல், கரூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அணையில் உட்பகுதியில் மண்  கரை அமைத்து தற்போது தேக்கி வைக்  கப்பட்டுள்ள 19 அடி தண்ணீரில் 9 அடி  தண்ணீரை இரு வாய்க்கால்கள் மூலம் விவசாய பாசனத்திற்கு விரைவில் திறந்து விட்டு 10 அடி தண்ணீரை மட்டும் தேக்கி வைத்து பழுதாகியுள்ள பழைய 5 ஷட்டர்களை ரூ .15 கோடி செலவில் சீரமைப்பது உள்ளிட்ட பணி களை செய்வது என்று முடிவு செய்யப்  பட்டது. விரைவில் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் குடகனாற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்று விவசாயிகள்  கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.  இப்பணி முடிந்தவுடன் வருங்காலங்க ளில் அணையில் முழுமையாக தண் ணீர் தேக்கி வைக்கமுடியும்.