திருவில்லிபுத்தூர், மார்ச் 31- திருவில்லிபுத்தூர் நகர் மன்ற குழு உறுப்பினர்கள், நியமன குழு, ஒப்பந்த குழு, வரி மேல் முறை யீட்டுக் குழு உறுப்பினர்கள் மறை முக தேர்தல் நகர்மன்ற நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மல்லிகா தலை மையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், துணைத்தலைவர் செல்வமணி, நகர்நல அலுவலர் கவிப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறைமுக தேர்தலில் நியமன குழு உறுப்பினராக சுகுமாரியும், ஒப்பந்த குழு உறுப்பினராக சுரே சும், வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக மீரா தனலட்சுமி முருகன், அனிதா, லூர்து மெர் சியா, பாலமுருகன் ஆகிய 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.