புதுக்கோட்டை, செப்.28 - தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டு மென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தி உள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்கப் பேரணி-பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. பேரணி யைத் தொடங்கி வைத்து பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், “மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்றும், அரசியல் ஒரு சாக்கடை என்றும் பிற்போக்கு வாதிகளால் கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படு கிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பா லான அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் மாணவர் பரு வத்தில் அரசியல் அறிவு பெற்றவர் கள்தான். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்க ளில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தாமல் உள்ளனர்.தற்பொழுது கல்வி நிறுவனங்கள் சாதியக் கட்டமைப்புகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அரசியல் அறிவு பெற்ற, அறிவுச் சமூகமாக வளர வேண்டுமானால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சட்டமன்றத்தி லும் முறையிடுவேன்” என்றார்.