districts

img

மேற்கூரை இடிந்து மாணவர்கள் காயம்

ஓசூர், நவ. 8- ஒசூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் கட்டிடத்தின் மேற்கூரை காங்கிரிட் பெயர்ந்து விழுந்ததில் 1ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநக  ராட்சி 9ஆவது வார்டிற்குட்பட்ட பாரதியார் நகரில் மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1ஆம் வகுப்பில் 33 மாண வர்கள் பயின்று வரும் நிலையில் நவ.7 அன்று வகுப்பு ஆசிரியை உமா ராணி  பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, வகுப்பறையின் மேற்புற மேற்கூரை காங்கிரிட் 2 அடி அகலத்திற்கு பெயர்ந்து விழுந்ததில் முன்வரிசையில் அமர்ந்திருந்த சர்தார் ஷெரிப் (6), நிக்கில் (6), சாய் விஷ்வாந்த் (6) ஆகிய மூன்று மாணவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சாய் விஷ்வாந்த் என்கிற மாண வனுக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் வகுப்பறையின் சீலிங் காங்கிரிட் பெயர்ந்து விழுந்து 3 மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் மா ண வர்கள், பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.