districts

img

தலித் மக்களின் சுடுகாட்டிற்கு நிலம் இல்லை

கிருஷ்ணகிரி, ஜன. 23- பொதுப் பாதை ஆக்கிர மிப்பை அகற்றி, சுடுகாட்டிற்கு நிலம் ஒதுக்கக் கோரி நரால்சந்தம் பட்டி தலித் மக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் குள்ளம்பட்டி அஞ்சல் நரால் சந்தம்பட்டிபட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் 100 ஆண்டு களுக்கும் மேலாக வசிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இவர்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை சைதாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கல், மண்ணை கொட்டி மக்கள் செல்லவிடாமல் தடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது அங்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை அமைக்க அனுமதிக்க முடி யாது என்று பாதை ஆக்கிர மிப்பாளர்கள் கூறி வருவதாக தெரிய வருகிறது. இதனால் நரால்சந்தம்பட்டி தலித் மக்கள் பாதை இல்லாமல் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் அங்கும் இங்குமாக தனியார் நிலத்திலும்,  ஒற்றையடி பாதை யிலும் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.  தலித் மக்களின் சுடுகாட்டிற்கு தனியாக இடம் ஒதுக்கவில்லை. இனதால், அருகில்லுள்ள குட்டை, ஏரிக்கரை ஓரங்களில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த இடங்குக்கு செல்ல வேண்டும் என்றாலும் தனியார் நிலங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மத்தூரிலிருந்து 4 கிலோ மீட்டர், போச்சம்பள்ளியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இந்த கிராமம் உள்ளதால், பேருந்து வசதியும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தலித் மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் 10 பேரை மட்டும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இல்லாத தால் மாவட்ட வருவாய் அலு வலர் ராஜேஸ்வரியிடம் மனு அளித்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும், சுடுகாட்டிற்கு நிலம் ஒதுக்கக் கோரியும், கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.