districts

கரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயன்பெற்று வரும் தொழில் முனைவோர்கள்

கரூர், மார்ச் 20- கரூர் மாவட்டத்தில் மாவட்டத்  தொழில் மையத்தின் சார்பில் நடப்  பாண்டில் புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன  மேம்பாட்டுத் திட்டத்திற்கு (NEEDS), 11 பயனாளிகளுக்கு 109 லட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்சமயம் வரை 22 பயனாளிகளுக்கு 546.61  இலட்சம் மதிப்பீட்டில் இலக்கீடு  எய்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு (UYEGP) 28 பயனாளி களுக்கு 22 இலட்சம் இலக்கீடு பெறப்பட்டு,  தற்சமயம்  வரை 58 பயனாளிகளுக்கு 64.85 இலட்சம் இலக்கீடு எய்தப்பட்டுள்ளது.   பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு  (PMEGP) 255 பயனாளிகளுக்கு 741  இலட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்சமயம் வரை 236 பயனாளி களுக்கு 764.00 இலட்சம் இலக்கீடு  எய்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி யின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் 100 பய னாளிகளுக்கு இலக்கீடு பெறப் பட்டு, தற்சமயம் வரை 73 பயனாளி களுக்கு இலக்கீடு எய்தப்பட்டுள் ளது.  மேற்கண்டவாறு செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்க ளின் கீழ் பயன்பெற்று வரும் பய னாளிகளில் புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் விண்ணப்பித்து பயனடைந்த பயனாளி எஸ்.சத்யா (டிஜிட்டல் டெக்ஸ்டைல்  பிரிண்டிங் நிறுவன  உரிமையாளர்)  தெரிவிக்கையில், “மாவட்ட தொழில் மையத்தை அணுகி NEEDS திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன்மூலம்  ரூ.95  லட்சம் கடனுதவி பெற்று டிஜிட்டல்  டெக்ஸ்டைல்  பிரிண்டிங் நிறு வனத்தை ஆரம்பித்து சிறப்பாக தொழிலை நடத்தி வருகிறேன்.

இவ்வகையான வழிவகையினை ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட தொழில் மையத்திற்கு எனது மன மார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.     எம்.அருண் குமார் & சி.மதன குமார் ஆகியோர் கூறுகையில், நாங்கள் இருவரும் மாவட்ட தொழில் மையத்தை அணுகி அங்கு செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து  கேட்டறிந்தோம். அதனடிப்படை யில் எங்களது ஆர்வத்தில் உதித்த  அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறு வனம் ஒன்றை நிறுவுவதற்கு மேற்கண்ட துறையின் கீழ் இயங்  கும் நீட்ஸ் (NEEDS) திட்டத்தில் விண்ணப்பித்தோம். அதன்மூலம் இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.44,00,000/- மதிப்பீட்டில் கடனு தவி பெற்று அதில் ரூ.11,76,000/- மானியமும் கிடைக்கப் பெற்றோம். தற்சமயம் இப்பகுதியில் நல்ல தரமான அட்டைப்பெட்டிகளை தயாரித்து சிறப்பான முறையில்  விற்பனை செய்து வருகிறோம். இதன்மூலம் எங்கள் வாழ்வா தாரமும் உயர்ந்து வருகிறது. இவ்  வகையான வழிவகையினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முத லமைச்சர் அவர்களுக்கு நெஞ் சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தனர். இவ்விபரங்களை, கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.