districts

ரவுடி குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காஞ்சிபுரம்,பிப்.17-   தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த படப்பை குணாவை குண்டர் சட்டத்தில்  கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். திருப்பெரும்புதூர் அருகே உள்ள மதுர மங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவர்  மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  மாவட்டங்களில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 48 வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் படப்பை குணா மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால்  அவர் காவல்துறையிடம் சிக்காமல் இருந்தார்.  இதைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும்  வகையில் கூடுதல் காவல்துறை கண்காணிப் பாளர் வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு  பிரிவு அமைக்கப்பட்டது. இதன் பின்னர் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். என்கவுண்டருக்கு பயந்து இருந்த படப்பை குணாவின் மனைவி தனது  கணவர் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அப்போது காவல்துறை தரப்பில் என்கவுண்டர் திட்டம் எதுவும் இல்லை. சரணடைந்தால் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என்று தெரி விக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் 25 ஆம்  தேதி ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே அவர் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பேன் என்று எழுதிக் கொடுத்ததில் இருந்து மீறியதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப் பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த படப்பை குணாவை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாக ரின் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித் திருக்கிறார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் ரவுடி குணாவின் மனைவி எல்லம்மாள் பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர்.  ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்றுவதற்காக அவர் முயற்சி எடுத்து அதில் தோல்வியடைந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு,  முன்னாள் ஒன்றிய அமைச்சரும்  மூத்தத் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் எல்லம்மாள் பாஜகவில் இணைந்தார். ரவுடிகளை பாஜக தொடர்ந்து கட்சியில் சேர்த்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச் சாரத்தில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவினருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் கட்டப் பஞ்சாயத்து கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படுமாம்!