districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளென்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்ய வேண்டும் அமைச்சர் எ.வ. வேலு வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி, அக்.17- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யவேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (அக்.15) நடைபெற்றது. தனி யார் திருமண மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் தலைமை தாங்கினார்.  சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் கூட்டுறவு சங்க பொது மேலாளர் ரமேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பெருந்தலைவர் ஆறுமுகம்,  துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 17- பேருக்கு ஆணை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாவட்டத்தின் வளர்ச்சி என்பது ஒரு சில துறைகளின் வளர்ச்சி மட்டுமல்ல, பல்வேறு துறைகள் சேர்ந்து வளர்ச்சி அடைந்தால்தான் அது மாவட்டத்தின் வளர்ச்சியாக கருதப்படும்.

இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறநிலையத்துறை, நுகர்வோர் வாணிப கழகம் மற்றும்  கூட்டுறவுத் துறை அலுவலகம் ஆகியவை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து கள்ளக்குறிச்சியில்  செயல்பட்டு வருகிறது.  கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் கட்டுவது தொடர்பான வழக்கில் அரசு, உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும். தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 308 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம்  நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 73 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் ஆண்டில் 2 லட்சம் லிட்ட ருக்கு அதிகமாக பால் உற்பத்தி செய்யும் அளவிற்கு நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெரு மாள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், நகர மன்ற தலைவர் சுப்பராயலு உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக  நாகராஜ் சிவகுமார் நன்றி கூறினார்.