districts

img

போட்டித் தேர்வில் எளிதில் வெற்றி பெற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் யோசனை

கள்ளக்குறிச்சி, மார்ச் 30- போட்டி தேர்வில் தன்னம்பிக் கையுடனும் விடாமுயற்சியுடனும் பயிற்சி மேற்கொண்டால் எளிதில் வெற்றி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2 மற்றும் 2ஏ, குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் ஆட்சியர்பி .என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தும், நடப்பு நிகழ்வுகள் குறித்த கையேட்டையும் மாணவர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் பேசிய ஆட்சியர், “போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித் தவர்களுக்கு திறன்மிக்க பயிற்சி யாளர்கள் மூலமாக  பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் போட்டியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு, தேர்வுகள் குறித்த சந்தேகங்களையும், கேட்டறிந்து பயன டையலாம்” என்றார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன், சார்பதி வாளர் இரா.அறிவழகன், உதவி வேலை வாய்ப்பு அலுவலர் செங்கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.