districts

img

டிச.26 நெய்வேலியில் போராட்டம் அனைத்து கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

கடலூர், டிச. 10- நெய்வேலில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் 26ஆம் தேதி அனைத்து கட்சியின் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். துகுறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ தலை மையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறு முகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் துரை, மாநில நிர்வாக குழு உறுப்பி னர் டி.மணிவாசகம், மதிமுக மாவட்டச் செயலாளர் ராம லிங்கம், விசிக பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன், மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், அருள்பாபு, மாவட்டச் செயலாளர் ஆனந்த் மற்றும் என்எல்சிக்கு நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் போராட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது:- என்எல்சி நிறுவனம் மின்சார உற்பத்திக்காக 53 கிராமத்தில் நிலம் கையகப்படுத்தி பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. ஆனாலும் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. நிரந்தர வேலையும் வழங்கவில்லை. இந்நிலையில், மீண்டும் நிலத்தை கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் விவசாயிகளின் குடி யிருப்புகளையும் இடித்து வருகிறது.  புதிதாக நிலம் கொடுக்கும் விவ சாயின் குடும்பத்திற்கு பணம் கொடுக்கும் அதே நாளிலே நிரந்தர வேலைக்கான பணி ஆணையும் வழங்க வேண்டும்.

வேலை விரும்பாத வர்களுக்கு ஒரு முறை பணப்பய னாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். வீட்டு மனைக்கு ஒரு சென்ட்க்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்று மனை குறைந்தபட்சம் 20 சென்ட்டும் அதிகபட்சமாக அவரவர் அனுபவிக்கும் அளவுக்கு வழங்க வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத் தும் போது ஒன்றிய அரசு இழப்பீடு, வேலை வழங்கவில்லை என்றால், தமிழக அரசு வேலை வழங்கும் என உத்தரவாதம் அளித்தது போல் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தும் நில உரிமையாளருக்கு தமிழக அரசு சார்பில் வேலை வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும். நிலம் வழங்கிய வர்கள் மற்றும் புதிதாக நிலம் வழங்க உள்ளவர்களுக்கு பாரபட்சம் இன்றி நிரந்தர வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்எல்சி பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டியதன் அவசியம் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மான மும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை களை நடத்து வருகிறோம். எனவே தமிழக முதலமைச்சர் இந்த பிரச்ச னையில் சிறப்பு கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி டிசம்பர் 26ஆம் தேதி நெய்வேலி யில் ஊர்வலம் மற்றும் போட் டத்தை நடத்துகிறோம். இதில் சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர்  இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தமீம் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த போராட்டத்தில்  விவசாயிகள், நிலம் கொடுத்தவர்கள், வேலை கிடைக்காதவர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.