கடலூர், மார்ச் 29 - காதலன் முன்பு காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூர் கம்மியம் பேட்டை பகுதி யில் திங்கட்கிழமை (மார்ச் 28) இரவு 21 வயது இளம் பெண்ணை காதலன் கண் முன்னே 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ள னர். பாதிக்கப்பட்ட இளம் பெண் தன் காதலனுடன் கம்மியம்பேட்டை சாலை யில் உள்ள ஒரு வீட்டின் அருகில் நின்று தனியாக பேசிக்கொண்டிருந்த போது, அந்த வழியாக குடிபோதையில் வந்த 3 பேர் காதலனை கட்டிப்போட்டு அவன் கண் முன்பே பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். மேலும், காதலனின் செல்போனை யும் பறித்துக்கொண்ட அந்தகும்பல், பாலியல் வல்லுறவு செய்ததை ஆபாச வீடியோவும் எடுத்துள்ளனர். கடலூர் நகரகத்தின் மையப்பகுதி நடைபெற்ற இச்சம்பவம் கடலூர் நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காதலன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி.மாதவன்
கடலூர் நகரத்தின் மையப்பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் நகரில் பல்வேறு இடங்களில் மின் விளக்குகளை சீர்படுத்த வேண்டும் என்று பல முறை பொதுமக்கள் மாநகர நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருந்த காரணத்தால் இது போன்ற குற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடலூர் நகரில் கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் கடத்தப்படு வதும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும், பேருந்து நிலையத்தில் தனியாக நிற்க முடியாத சூழ்நிலையும் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் பெண்கள் தனி யாக நடமாடுவதற்கு அச்சப்படும் அளவுக்கு கடலூர் நகரத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் நகரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் காவல் நிலையங்களிலும் ஏராளமான பெண்கள் மீதான வன்முறை வழக்கு கள் தேங்கி இருப்பது குறிப்பிடத் தக்கது.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். சம்மந்தப்பட்ட 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருந்தாலும் தீவிரமாக விசாரணை நடத்தி கடுமை யான தண்டனை கிடைப்பதற்கான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக காவல்துறை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற குற்றங்கள் கடலூர் நகரத்தில் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், இரவுநேர ரோந்துப் பணிகளை அதிகப்படுத்துவதும், பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் முக்கியமாக மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தேங்கிக் கிடக்கும் பெண்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தி நடத்துவது இன்றைக்கு இருக்கக்கூடிய உடனடித் தேவையாகும். கடலூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனையும், நடை பெறுவதாக ஏராளமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. இதுபோன்ற சட்ட விரோதமான போதைப் பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக பெண்கள் மீதான வன்முறை களும், கிரிமினல் குற்றங்களும் அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. கடலூர் மாவட்ட காவல்துறை துரிதமாக செயல்பட்டு பெண்கள் மீதான வன்முறை குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.