சிதம்பரம், டிச. 17- சிதம்பரம் மீன் மார்க்கெட் வீதியில் வசிப்பவர் ஜனார்த்தனன். இவரது மகன் சந்தோஷ்குமார் (28). இவர் சனிக்கிழமை அதிகாலை தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் திரும்பி குச்சிப்பாளையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சாலையோரம் இருந்த குடிநீர் குழாய் கட்டையில் மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் தாலுக்கா காவல் துறையினர் சந்தோஷ் குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். கடும் பனிப்பொழிவின் காரண மாகவே இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.