பாலக்கோடு, மே 11- தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஊராட்சி இந்திரா நகரில், 50 க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக் கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ரேசன் கார்டு, சாதிச் சான்றிதழ், ஆதார்கார்டு, வீடு இல்லாமல் அப்பகுதியில் புறம்போக்கு இடத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் ஒரு சிலருக்கு மட்டும் தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் மீத முள்ள, 20 க்கும் மேற்பட்டோ ருக்கு வீடு இல்லாமல் மண் வீடுக்கட்டி மேற்கூறைக்கு பிளாஸ்டிக் அட்டைகள் போர்த்தி மின்சாரம் இல்லாம் இருளில் வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டு களாக வீடுக்கேட்டு போராடி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் பலத்த காற்று மழை பெய்தது. இதனால் மண் வீட்டின் மேல் போர்த்தியிருந்த பிளாஸ்டிக் அட்டைகள் காற்றில் பறந்து சேதமா னதால், இரவு முழுவதும் அப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் தங்க ளது குழந்தைகளுடன் இரு ளில் மழையில் நனைந்த படி குளிரில் நடுங்கி இருந் துள்ளனர். தகவல் அறிந்து எந்த ஒரு அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட இடத்தற்கு வராததால் அப்பகுதியில் வீடு இழந்த இருளர் இன மக்கள் வீடு மற்றும் உண வியின்றி தவித்து வருகின் றனர்.இந்த பாதிப்பின் காரணமாக அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர மான வீட்டிற்கு பசுமை திட்டத்தில் வீடுக்கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.