districts

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் 4 ஆவது புத்தக திருவிழா மேட்டுபாளையத்தில் துவங்கியது

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் 4 ஆவது புத்தகத் திருவிழா மேட்டுபாளையத்தில் இன்று துவங்கியது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 4 ஆவது புத்தகத் திருவிழா மேட்டுப்பாளையம் கோ - ஆபரேட்டிவ் காலனியில் உள்ள இஎம்எஸ் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது. இதனை நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா, தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகை செல்வன் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அறிவியல், அரசியல்,இலக்கியம், குழந்தைகளுக்கான புத்தகங்கள்,நாவல்கள்,பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள்,பதிப்பகங்களின் புத்தகங்கள், போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள்,பயணக்கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளில் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களின் மாலை நேர நிகழ்ச்சிகள், குழந்தை செயல்பாட்டாளர்கள் -  மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கோளரங்கம் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்தது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த மக்கள்  இந்த புத்தக கண்காட்சியில் திரளாக கலந்து கொண்டுகண்டுகளித்து பிடித்தமான புத்தகங்களை தேடியெடுத்து வாங்கி சென்றனர்.

புத்தக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது பாதுஷா,புத்தகத் திருவிழா வரவேற்பு குழு செயலாளர் மஸ்தான், தலைவர் மணி,துணைத்தலைவர் மருத்துவர் மகேஸ்வரன், பொருளாளர் ராஜாமணி, மாநில செயலாளர் மகபுநிசா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.