கோவை, ஜூன் 16– கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான 31 ஆவது ஸ்கேட்டிங் போட்டிகளில் கோவை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை அள்ளி னர். மாநில அளவிலான 31 ஆவது ஸ்கேட்டிங் போட்டிகள் கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் வஉசி ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஜூன் 10 ஆம் தேதியன்று தொடங்கி இப்போட்டிகள் ஜூன் 14 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றன. மொத்தமாக 37 மாவட்டங் களில் இருந்து 850 வீரர்கள் பங்கேற்ற னர். 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு மேற்பட் டோர் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி கள் நடைபெற்றன.இதில், டிராக் போட்டிகள் வ.உ.சி. ஸ்கேட்டிங் மைதானத்திலும், ரோடு ஷோ வகை போட்டிகள் கோவை புறவழிச்சாலை யில் உள்ள தனியார் மைதானத்திலும் நடைபெற்றது. சில குறிப்பிட்ட வகை யிலான போட்டிகள் காந்திபார்க் பகுதி யிலும், டவுன்ஹில் மற்றும் ஆல்பைன் பிரிவு போட்டிகள் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியிலும் நடைபெற்றன. இந்த போட்டிகளில் அனைத்து பிரி வுகளிலும் கோவை மாவட்ட வீரர்கள் பங்கேற்று 33 தங்கப் பதக்கங்கள், 31 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் என மொத்த மாக 88 பதக்கங்களை வென்று 282 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றி யது. சென்னை அணி 30 தங்கங்கள், 20 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்த மாக 71 பதக்கங்களை வென்று 237 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பெற்றது. ஒட்டுமொத்த சாம்பியன் பட் டத்தை வென்ற கோவை அணிக்கு இந் திய ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொதுச் செயலாளர் நரேஷ் சர்மா, பொருளா ளர் பகிரத், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட் டிங் சங்க தலைவர் பிரதாப் குமார் ஆகியோர் கோப்பையை வழங்கி னர். கோவை அணி சார்பில் கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்க தலைவர் சுதாகரன், துணைத் தலைவர் அருண் பிரசாத், செயலாளர் சந்திரசேகர் மற் றும் வீரர், வீராங்கனைகள் பெற்றுக் கொண்டனர்.