districts

கட்டுமானப் பொருட்கள் தர பரிசோதனை முகாம்

பொன்னமராவதி, செப்.20- புதுக்கோட்டை பொன்னமராவதியில் வி.என்.ஆர்.கட்டுமான நிறுவனத்தின் முயற்சியில் இலவச பரிசோதனை முகாம் நடந்தது. முகாமினை பொறியாளர் வி.என்.ஆர் நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மொபைல் லேப் மூலம் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் டி.ஜி.எம் (மார்க்கெட்டிங்) மேனேஜர் அய்யப்பவாசன், முதுநிலை மேலாளர் அருண்பிரசாத், ராஜேந்திரன் டெக்னிக் மேனேஜர் விக்டர், இணை மேலாளர் அகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு பொருட்கள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் அன்பு வணிக நிறுவனம் குமார், பெருநாவலர் பாஸ்கரன், பொறியாளர் ராமநாதன் நாட்டுக்கல் சேது, பாக்கியராஜ் சதீஸ், ராஜேஸ், சுசிந்தர், பொதுமக்கள், பொறியாளர்கள், கட்டட கான்ட்ராக்டர்கள் கலந்து கொண்டனர். பொன்னமராவதி பகுதியில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் நலனுக்கான இலவச மருத்துவ முகாம், நல வாரிய பலன்களை பெறும் வகையில் முகாம் உள்ளிட்ட பணிகளை வி.என்.ஆர் நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.