செங்கல்பட்டு: 82 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1308ஆக உயர்ந்துள்ளது. தற்சமயம் மருத்துவமனைகளில் 634 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்: 15 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 250 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்தனர். 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூரில் ஆயிரத்தை கடந்தது
cதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 616 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தி.மலையில் தொற்று 444
திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 444 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூரில் 37ஆக உயர்வு
ஆம்பூர் அடுத்த கடாம்பூர் கிராமத்தில் ஆய்வக நுட்ப ஆய்வாளர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 37 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று 82
புதுவையில் செவ்வாயன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.