districts

சென்னையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்குமா?

சென்னை,மார்ச் 5-   சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரு கிறது.  தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். கோடை தொடங்கும் போது மார்ச் மாத இறுதியில் பகலில் வெப்பநிலை உயரக்கூடும். எனவே சென்னையில் இந்த மாதம் இறுதியில் வெப்பம் அதி கரிக்க தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் தற்போது தென்தமிழகத்தில் சில இடங்களில் பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக இந்த மாதத்தில் வெப்பநிலை இயல்பான நிலையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.   இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறும் போது, ‘கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசாக இருக்கும். மார்ச் மாதம் முழுவதும் சாதாரண வெப்பநிலையை நாம் எதிர்பார்க்கலாம்’ என்றார். காற்றின் சுழற்சி ஆந்திராவை நோக்கி நகர்ந்தால் சென்னையில் மழை பெறலாம், ஆனால் அது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்தால் பகல் வெப்பநிலை உயரக்கூடும். ஏனெனில் அது அனைத்து ஈரப்பதத்தையும் இழுத்து விடும். மார்ச் 21-ந்தேதிக்கு பின்னர் பகல்நேர வெப்பநிலை உயரலாம்’ என்று தனியார் வானிலை  ஆய்வாளர்கள் கூறினர்.