districts

img

கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

மதுராந்தம், நவ. 3 - மதுராந்தகம் நகராட்சி யில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சாலையில்  சுற்றித்திரிவதால்  பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்,  மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  தெரு நாய்க ளின் இனப்பெருக்கம் அதிகமானதால் பொது மக்கள் அச்சத்துடன் சாலை களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப் பாக நகரின் பிரதான சாலைகளான மருத்துவ மனை சாலை, தேரடி வீதி  மற்றும் வணிக நிறுவனங் கள் அருகில் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித் திரிகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், பாதைசாரிகள், பெண்கள்,  குழந்தைகள் செல்லும் போது  நாய்கள் துரத்து வதால் செய்வதறியாது தவிக்கின்றனர். ஆகவே  மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என நகர மக்கள்  கோரிக்கை  வைத்துள்ளனர். இது குறித்து மதுராந்தகம் நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, கடந்த காலத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வரவில்லை தற்போது கோரிக்கை எழுந்துள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார்.