சிதம்பரம், மார்ச் 30- சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். அவரது வீட்டின் அருகே உள்ள குடிசையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி குளிக்கும் போது ஒருவர் வீடியோ படம் எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.