districts

img

நலவாரிய அலுவலகத்தை நவீனப்படுத்த வேண்டும்

கட்டுமான தொழிலாளர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஆக. 29- காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலவாரிய அலு வலகத்தை நவீனப்படுத்த வேண்டும் என  காஞ்சிபுரம் மாவட்ட கட்டுமான தொழிலா ளர் சங்க முதல் மாவட்டப் பேரவை வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் முதல் மாவட்ட பேரவை அமைப்பு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் படப்  பையில் முறைசார சங்கத்தின் மாவட்டத் செய லாளர் எஸ்.எம்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை பச்சை யப்பன் ஏற்றினார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.திருஞாணம் வரவேற்றார். மாநாட்டை துவக்கிவைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் பேசினார். தமிழ்  நாடு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் து.தலைவர் பி.ரமேஷ், கட்டுமன தொழிலாளர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் டி.பாபு, விவாசாயி கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட து.

செய லாளர் டி.லிங்கநாதன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் பேசி னார். படப்பையில் உள்ள இ-சேவை மையத்தை நவீனப்படுத்தி ஆதார் எண்ணு டன் கைபேசி எண்ணை இணைக்க வழி வகை செய்ய வேண்டும், கட்டுமான பொருட்  களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், 60 வயது முடிந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதி யம் வழங்க வேண்டும், கட்டுமானத் தொழி லாளர்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித் தர வேண்டும், கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்கூதியம் வழங்குவதுடன், அவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும், விபத்தில்  உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்  வழங்க  வேண்டும், இணையதளம் மூலம் புதிய அட்டை மற்றும் புதுப்பித்தலில் ஏற்படும் கால தாமதத்தை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய மாவட்டத் தலைவராக எஸ்.திரு ஞாணம், செயலாளராக ஆர்.கார்த்திக், பொருளாளராக எஸ்.எம்.குணசேகரன் உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.