விழுப்புரம், மே 12- மடிக்கணினி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவா ரண நிதிக்கு வழங்கிய மாண விக்கு பல்வேறு தரப்பின ரும் பாராட்டுகளை தெரி வித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கதனேசன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகள் சிந்துஜா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மடிக்கணினி வாங்க, உண்டியலில் பணம் சேமித்து வந்தார். சமீபத்தில் தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் சிந்துஜா கலந்து கொண்டு 2ஆவது பரிசாக 500 ரூபாய் பெற்றார். அதையும் உண்டியலில் போட்டார்.
தற்போது கொரோனா 2ஆவது அலை தீவிரமாக பரவி வருவதால் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் நிவராண நிதிக்கு பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வரு கின்றனர். இதையடுத்து தான் ஆசையாக மடிக்கணினி வாங்குவதற்காக உண்டிய லில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக சிந்துஜா தந்தையிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த கதனேசன், உண் டியலை உடைத்து அதில் இருந்த 1,500 ரூபாயை வங்கியில் கொடுத்து வரை வோலையாக எடுத்தார். பின்னர் அதனை முதல்வ ரின் கொரோனா நிவாரண நிதிக்காக மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார். மாணவி யின் இந்த செய்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.