districts

மலைப்பகுதி கடைகளை மூட உத்தரவிட நேரும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் எச்சரிக்கை

சென்னை, ஏப். 18 - மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை களை மூட உத்தரவிட நேரி டும் என டாஸ்மாக் நிர்வா கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன பகுதியில் பிளாஸ் டிக் பொருள்கள், மதுபாட் டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் எடுத்த வழக்கு திங்க ளன்று (ஏப்.18) நீதிபதி கள் பாரதிதாசன் மற்றும்  சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதி களில் உள்ள டாஸ்மாக் கடை களில் கண்ணாடி பாட்டில் களில் மதுபானங்களை வாங்கி அருந்துவோர், அதை வனப்பகுதிகளில் வீசிச்  செல்கின்றனர். அவற்றை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்றும் நீதிபதிகள் தெரிவித் தனர். இந்த கண்ணாடி பாட்டில் களை திரும்பப் பெறு வது தொடர்பாக ஏப்.25ம்  தேதிக்குள் திட்டத்தை வகுக்கும் படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத் திய நீதிபதிகள், தவறினால் மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.