districts

img

தாம்பரம் - வேளச்சேரி 2 கி.மீ. பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மே 13 - சென்னை  மேடவாக்கத் தில், 95.21 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பா லத்தின் தாம்பரம்- வேளச்சேரிபாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெள்ளியன்று (மே13) திறந்து வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.146.41 கோடி மதிப்பீட்டில், மேடவாக்கத்தில் மறை மலையடிகள் பாலம், இரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் - சோழிங்க நல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட்-மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இப்பணி இரண்டு தனித்தனி மேம்பால ங்களாக ஒவ்வொன்றும் 3 வழித்தட மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேளச்சேரி - தாம்பரம் தடத்தில், மேட வாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக் கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.06 கி.மீ. நீளத்தில் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன் பாட்டில் உள்ளது. தற்போது, தாம்பரம்- வேளச்சேரி தடத்தில், மவுண்ட் மேடவாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்புகளை இணைத்து 2.03 கி.மீ. நீளத்தில் இம்மேம் பாலம் அமைக்கப்பட் டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட் டுள்ளதால், மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, துரை ப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்க நல்லூர் மற்றும் மடிப்பாக் கம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கும் இப்பாலம் பயனுள்ளதாக அமையும். இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் எ.வ.வேலு,  தா.மோ.அன்பரசன்,  மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்  ராகுல் நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.